• Breaking News

    200,000 முட்டைகளை தெருவில் போட்டு உடைத்த விவசாயிகள்



    பிரான்சில் அதிக அளவில் உற்பத்தியாகும் முட்டைகளின் விலையை உயர்த்த வலியுறுத்தும் போராட்டத்தில் தினமும் சுமார் 1,00,000 முட்டைகள் சாலைகளில் போட்டு உடைக்கபடுகின்றன.

    பிரான்சில் கடந்த சில மாதங்களாக உற்பத்தி செய்யப்படும் முட்டைகளுக்கு ஏற்ப விலையை அதிகரிக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில், விவாசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்கப்படாததால், அவர்கள் ஒரு நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதன்படி, முட்டையின் விலையை அதிகரிக்கும் வரை தினமும் சுமார் 1,00,000 முட்டைகளை சாலைகளில் போட்டு உடைக்க முடிவு செய்தனர்.

    போராட்டத்தின் ஒரு கட்டமாக கார்ஹெயிக்ஸ் புலோகர் என்ற இடத்தில் உள்ள அரசு வரி அலுவலகத்தின் முன் திரண்ட விவசாயிகள் சுமார் 2 லட்சம் முட்டைகளை கீழே போட்டு உடைத்தனர்.

    இது தொடர்பாக கூறிய விவசாயி ஒருவர், அளவிற்கு அதிகமான முட்டை உற்பத்தி செய்யப்படும் நிலையில், அதிகளவில் முட்டைகள் கிடைக்கின்றன. இதனால் முட்டை விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. பராமரிப்புக்கு ஆகும் செலவைக்கூட எங்களால் முட்டை வியாபாரத்தின் மூலம் பெற இயலுவதில்லை எனக் கவலை தெரிவித்தார்.

     -----------------------------------------------

    Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

    If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


    Get in Touch With Us to Know More

    Like us on Facebook

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad