• Breaking News

    இலங்கை கெசினோ முதலீட்டில் பெக்கர்ஸுடன் கரம் கோர்க்கிறார் மைக்கல் கிளார்க்!


    உலகின் செசினோ சூதாட்ட மன்னன் என அழைக்கப்படும் அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பெக்கர்ஸ் க்ரவுன் மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கல் கிளார்க் ஆகியோருக்கு இடையில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.இலங்கையில் 400 மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படவுள்ள கெசினோ நிலையத்திற்கு பிரச்சாரம் செய்யும் வகையில் மைக்கல் கிளார்குடன், ஜேம்ஸ் பெக்கர்ஸ் க்ரவுன் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய இணையங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    கிரவுன்ஸ் நிறுவனம் முன்மொழிந்துள்ள கல்வி மற்றும் பயிற்சி அம்சங்கள் வெற்றிகரமாக இருந்தால் அதற்கு ஆதரவு வழங்கப்படும் என கிளார்க் இணக்கம் தெரிவித்துள்ளார்.

    கிளார்க், தொழில் வாய்ப்புத் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவார் என்றும் கல்வித் தூதுவராக இலங்கைக்கு விஜயம் செய்து வேலை தேடுபவர்கள் மற்றும் பயிற்சி பெறுபவர்களுக்கு அதரவு வழங்குவார் எனவும் ஜேம்ஸ் பெக்கர்ஸ் க்ரவுன் தெரிவித்துள்ளார்.

    இலங்கையில் 450 அறைகளைக் கொண்ட சூதாட்ட நிலையம் ஒன்றை அமைக்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

    அது தொடர்பான சட்டமூலம் ஒன்றையும் பாராளுமன்றில் சமர்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த கெசினோ திட்டத்திற்கு பிரதான எதிர்கட்சி உள்ளிட்ட ஏனைய எதிர்கட்சிகள் மற்றும் மத பிரிவுகளும், ஆளும் கட்சியில் உள்ள கூட்டணி கட்சிகள் சிலவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

     -----------------------------------------------

    Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

    If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


    Get in Touch With Us to Know More

    kindpng_1122282

    Brand-Center_-social-icons_join-us-community-icon_purple

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad