• Breaking News

    பாகிஸ்தான்-இலங்கை டெஸ்ட் கிரிக்கட் தொடர் நாளை ஆரம்பம்


    பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான இரண்டு போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 கிரிக்கட் தொடரை 1 க்கு 1 என சமப்­ப­டுத்­திக்­கொண்ட பின்னர் ஐந்து போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கட் தொடரை நழு­வ­விட்ட இலங்கை அணி, நாளை ஆரம்­ப­மா­க­வுள்ள மூன்று போட்­டிகள் கொண்ட தொடரில் திற­மையை வெளிப்­ப­டுத்தி வெற்­றி­கொள்ள முயற்­சிக்­க­வுள்­ளது.

    இந்த டெஸ்ட் தொடரை மிகுந்த நம்­பிக்­கை­யுடன் எதிர்­கொள்­ள­வுள்­ள­தாக இரண்டு நாடு­க­ளி­னதும் கிரிக்கட் அணித் தலை­வர்கள் குறிப்­பிட்­டுள்­ளதால் இத் தொடர் விறு­வி­றுப்பைத் தோற்­று­விக்கும் என நம்­பப்­ப­டு­கின்­றது.இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான முத­லா­வது டெஸ்ட் கிரிக்கட் போட்டி அபு­தாபி ஷெய்க் சய்யத் விளை­யாட்­ட­ரங்கில் நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ளது.


    இதனைத் தொடர்ந்து இரண்­டா­வது டெஸ்ட் போட்டி துபாய் விளை­யாட்­ட­ரங்கில் ஜன­வரி 8 முதல் 12 வரையும் கடைசி டெஸ்ட் போட்டி ஷார்ஜா விளை­யாட்­ட­ரங்கில் ஜன­வரி 16 முதல் 20 வரையும் நடை­பெ­ற­வுள்­ளன.இலங்கை அணியைப் பலப்­ப­டுத்தும் பொருட்டு சிரேஷ்ட வீரர்­க­ளான மஹேல ஜய­வர்­தன (முன்னாள் அணித் தலைவர்), விக்கட் காப்­பாளர் பிர­சன்ன ஜய­வர்­தன, சுழல் பந்­து­வீச்­சாளர் ரங்­கன ஹேரத் ஆகியோர் குழாமில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர்.


    இவர்­க­ளை­விட எஞ்­சலோ மெத்யூஸ் தலை­மை­யி­லான இலங்கை குழாமில் குமார் சங்­கக்­கார, தினேஷ் சந்­திமால், திமுத் கரு­ணா­ரட்ன, லஹிரு திரி­மான்ன, நுவன் குல­சே­கர, சுரங்க லக்மால், ஷமிந்த எரங்க, நுவன் ப்ரதீப், சச்­சித்ர சேனா­நா­யக்க, டில்­றுவன் பெரேரா, புது­முகம் விஷ்வா பெர்­னாண்டோ (இட­துகை வேகப்­பந்­து­வீச்­சாளர்) ஆகி­யோரும் இடம்­பெ­று­கின்­றனர்.


    இலங்கை அணியைப் பொறுத்­த­மட்டில் மஹேல ஜய­வர்­தன (138 டெஸ்ட்கள், 10,806 ஓட்­டங்கள்), குமார் சங்­கக்­கார (117 டெஸ்ட்கள், 10,486 ஓட்­டங்கள்), பிர­சன்ன ஜய­வர்­தன (52 டெஸ்ட்கள், 1,900 ஓட்­டங்கள்), எஞ்­சலோ மெத்யூஸ் (33 டெஸ்ட்கள், 1792 ஓட்­டங்கள்), ரங்­கன ஹேரத் (47 டெஸ்ட்கள், 200 விக்­கட்கள்), நுவன் குல­சே­கர (20 டெஸ்ட்கள், 46 விக்­கட்கள்) ஆகிய வீரர்­களே அனு­ப­வ­சா­லி­க­ளாக காணப்­ப­டு­கின்­றனர்.


    எனவே இலங்கை அணியை நல்ல நிலைக்கு இட்­டுச்­செல்லும் பாரிய பொறுப்பு இவர்­க­ளது கைக­ளி­லேயே தங்­கி­யுள்­ளது.


    பாகிஸ்தான் அணியைப் பொறுத்­த­மட்டில் யூனிஸ் கான் (86 போட்­டிகள், 7,௧௧­௪ ஓட்­டங்கள்), அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் (43 டெஸ்ட்கள், 2,854 ஓட்­டங்கள்), மொஹமத் ஹவீஸ் (34 டெஸ்ட்கள் 2061 ஓட்­டங்கள், 34 விக்­கட்கள்) அஸ்ஹர் அலி (31 டெஸ்ட்கள், 2,081 ஓட்­டங்கள்), உமர் குல் 47 டெஸ்ட்கள், 163 விக்­கட்கள்), சயீத் அஜ்மால் (30 டெஸ்கள், 159 விக்­கட்கள்), அப்துர் ரெஹ்மான் (19 டெஸ்ட்கள், 90 விக்­கட்கள்) ஆகியோர் பிர­தான வீரர்­க­ளாக இடம்­பெ­று­கின்­றனர்.


    வர­லாறு


    பாகிஸ்­தா­னுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான அங்­கு­ரார்ப்­பண டெஸ்ட் தொடர் பாகிஸ்­தானில் 1982 மார்ச் மாதம் நடை­பெற்­றது. 3 போட்­டிகள் கொண்ட அத் தொடரில் பாகிஸ்தான் 2 க்கு 0 என வெற்­றி­பெற்­றி­ருந்­தது. தொடர்ந்து 1985 இல் மீண்டும் பாகிஸ்­தானில் நடை­பெற்ற தொட­ரிலும் 2 க்கு 0 என பாகிஸ்தான் வெற்­றி­பெற்­றி­ருந்­தது.


    1986இல் இலங்­கையில் நடை­பெற்ற தொடரில் இலங்கை முதல் தட­வை­யாக பாகிஸ்­தானை டெஸ்ட் போட்­டியொன்றில் வெற்­றி­கொண்­ட­துடன் தொட­ரையும் 1 க்கு 1 என சமப்­ப­டுத்­திக்­கொண்­டது.


    கொழும்பு சி சி சி மைதா­னத்தில் 1986 மார்ச் 14 முதல் 18 வரை நடை­பெற்ற அந்­த இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியில் டுலீப் மெண்டிஸ் தலை­மை­யி­லான இலங்கை அணி, இம்றான் கான் தலை­மை­யி­லான பாகிஸ்தான் அணியை 8 விக்­கட்­களால் வெற்றி­கொண்­டது.


    பாகிஸ்தான் முதல் இன்: 132 (கோசல குறுப்­பு­ஆ­ராச்சி 44 க்கு 5 விக்., அஷன்த டி மெல் 39 க்கு 3 விக்.), 2வது இன்: 172 (ரவீந்­திரன் ரட்­நா­யக்க 37 க்கு 5 விக்.) இலங்கை முதல் இன்: 273 (அர்­ஜுன ரண­துங்க 73 ரவி ரட்­நா­யக்க 38, அர­விந்த டி சில்வா 37, சிதத் வெத்­த­முனி 37), 2வது இன்: 32 க்கு 2 விக்.


    அதன் பின்னர் நடை­பெற்ற இரண்டு தொடர்­க­ளிலும் தோல்வி அடைந்த இலங்கை 1995இல் பாகிஸ்­தானை அதன் சொந்த மண்ணில் முதல் தட­வை­யாக தொடர் ஒன்றில் வெற்­றி­கொண்­டது. அர்­ஜுன ரண­துங்க தலை­மை­யி­லான இலங்கை அணி மூன்று போட்­டிகள் கொண்ட அந்தத் தொடரை 2 க்கு 1 என வெற்­றிக்­கொண்டு வர­லாறு படைத்­தது. அத் தொடரில் பாகிஸ்­தானின் அணித் தலை­வ­ராக பிர­பல தொலைக்­காட்சி வர்­ண­னை­யாளர் ரமீஸ் ராஜா தலைமை தாங்­கி­யி­ருந்தார்.


    இவ்­வா­றாக இரண்டு நாடு­க­ளுக்கும் இடையில் டெஸ்ட் தொடர்கள் இரண்டு நாடு­க­ளிலும் மாறி மாறி நடந்­து­வந்­த­போ­திலும் 2009ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதி காலை இலங்கை அணி­யினர் பய­ணித்த பஸ் வண்டி மீது லாகூரில் நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலின் பின்னர் இலங்கை உட்­பட மற்­றைய நாடுகள் பாகிஸ்­தா­னுக்கு விஜயம் செய்­வதை நிறுத்­திக்­கொண்­டன.


    இதன் கார­ண­மா­கவே நடு­நி­லை­யான ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான டெஸ்ட் தொடர் நடை­பெ­ற­வுள்­ளது.இது­வரை இரண்டு நாடு­க­ளுக்கும் இடையில் 43 போட்­டிகள் நடை­பெற்­றுள்­ள­துடன் 16இல் பாகிஸ்­தானும் 10இல் இலங்­கையும் வெற்­றி­பெற்­றுள்­ளன. 17 போட்­டிகள் வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­துள்­ளன.

     -----------------------------------------------


    Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

    If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


    Get in Touch With Us to Know More

    kindpng_1122282

    Brand-Center_-social-icons_join-us-community-icon_purple

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad