• Breaking News

    இலங்கை அணியில் பாரிய மாற்றங்களுக்கான வாய்ப்பு?


    இலங்கை அணி தொடர்ந்தும் சோபிக்க தவ­று­கின்­ற­மையால் கிரிக்கெட் அணியில் பாரிய மாற்­றங்கள் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் எழுந்­துள்­ளன. அத்­தோடு அணியின் வேகப்­பந்து வீச்­சாளர் லசித் மலிங்க மற்றும் அதி­ரடி துடுப்­பாட்ட வீரரும் பந்து வீச்­சா­ள­ரு­மான தி­ஸர பெரேரா ஆகி­யோரின் இருப்பும் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ள­தாக செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன.

    பயிற்றுவிப்பாளர்களிலும் மாற்றங்கள் ஏற்படலாமென்றும் குறித்த ஆங்­கில ஊட­க­ம் செய்­தி வெளி­யிட்­டுள்­ளது.

    இது தொடர்பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, லசித் மலிங்­கவின் அண்­மைக்கால பெறு­பே­றுகள் மிகவும் மோச­மா­ன­தாக அமைந்­துள்­ளன. இதனால் அவர் அணி­யி­லி­ருந்து நீக்­கப்­ப­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.இலங்கை கிரிக்கெட் சபையின் மூத்த அதி­கா­ரி­க­ளுக்­கி­டையில் இடம்­பெற்ற சந்­திப்­பை­ய­டுத்து புதிய வரு­டத்தில் அதி­க­ள­வி­லான மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முடிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

    ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் வைத்து பாகிஸ்­தா­னுக்­கெ­தி­ராக இலங்கை அணி 2--3 என்ற கணக்கில் ஒருநாள் சர்­வ­தேசப் போட்டித் தொடரைத் தோற்ற பின்பு, முழு­மை­யான திற­மை­களை வெளிப்­ப­டுத்­தாத சிரேஷ்ட வீரர்­களைக் கொண்டு போட்­டி­களை வெற்றி கொள்ள முடி­யாது எனத் தெரி­விக்­கப்­பட்­ட­தா­கவும், அதன் கார­ண­மாக லசித் மலிங்க இலங்கை அணி­யி­லி­ருந்து நீக்­கப்­ப­டலாம் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

    லசித் மலிங்க, திஸர பெரேரா இரு­வரும் போது­மா­ன­ளவு அர்ப்­ப­ணிப்பை வெளிப்­ப­டுத்­து­வ­தில்லை எனவும், லசித் மலிங்­கவின் உடற்­த­குதி தொடர்­பான பிரச்­சி­னை­களும் காணப்­ப­டு­வ­தா­கவும், அதன் கார­ண­மாக உடற்­த­குதிப் பயிற்­சி­க­ளிலும் லசித் மலிங்க பங்­கு­பற்­று­வ­தில்லை எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.



    இதே­வேளை இடம்­பெற்­று­வரும் பிக் பாஷ் லீக் தொடரில் பங்­கு­பற்­று­வ­தற்­கான அனு­ம­தியை திஸர பெரேரா கோரி­யி­ருந்­த­தாக அச்­செய்­தியில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆனால் அதற்­கான அனு­மதி மறுக்­கப்­பட்­ட­தோடு, இலங்­கைக்கு திரும்பவுள்ள அவர் இலங்கை "ஏ" அணி போட்­டி­களில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    இவர்­களைத் தவிர, இலங்­கையின் துடுப்­பாட்டப் பயிற்­று­விப்­பாளர் மாவன் அத்­தப்­பத்து, களத்­த­டுப்புப் பயிற்­று­விப்­பாளர் றுவன் கல்­பகே ஆகி­யோரின் பத­வி­களும் ஆபத்­தி­லுள்­ள­தாகக் குறிப்பிடப்படுகிறது.

     -----------------------------------------------

    Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

    If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


    Get in Touch With Us to Know More

    kindpng_1122282

    Brand-Center_-social-icons_join-us-community-icon_purple

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad