• Breaking News

    பாகிஸ்தானில் ஆளும்கட்சி உறுப்பினர் கொரோனாவுக்கு பலி


    பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்   இன்சாப் கட்சி ஆட்சி செய்து வருகிறதுஅந்நாட்டில் மற்ற நாடுகளை போல கொரோனா பாதிப்பு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறதுஇதுவரை 980க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளனர்.  45 ஆயிரத்து 895 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    அக்கட்சியின் பஞ்சாப் மாகாண அவை உறுப்பினராக இருந்து வருபவர் ஷாஹீன் ரஜா (வயது 60).  கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் லாகூரில் உள்ள மேயோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    கடந்த வார இறுதியில் அவருக்கு உடல்நலம் மோசமடைந்ததுஇதனால் அவருக்கு வென்டிலேட்டர் இணைப்பு கொடுக்கப்பட்டதுஎனினும், வைரஸ் தொற்றுக்கு அவர் இன்று பலியாகி உள்ளார்அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற வியாதிகளும் இருந்துள்ளனஇதனால் அவரது நிலைமை மோசமடைந்து இருந்தது என அதிகாரிகள் கூறினர்.

    அவரது மறைவுக்கு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி மற்றும் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad