• Breaking News

    ஐபிஎல் நடத்த விரும்பும் கங்குலி



    உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலால் உலகின்  பல்வேறு நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு, மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குத் தடை எனப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன இதனால் உலகின் அனைத்து நாடுகளிலும் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. ஒலிம்பிக் தொடங்கிஐபிஎல், உள்ளூர் விளையாட்டுப் போட்டிகள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
     கொரோனா காரணமாக, இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தள்ளிப்போன நிலையில், இனி ஐபிஎல் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளதுஇந்தநிலையில், 2020ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியை இந்தாண்டே நடத்தகிறிக்கெற் கட்டுப்பாட்டு சபை விரும்புவதாகவும், வீரர்களும், அணி உரிமையாளர்களும் அதையே எதிர்பார்ப்பதால், விரைவில் அதுகுறித்து முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் கங்குலி குறிப்பிட்டுள்ளார்
    இதுகுறித்து கங்குலி கூறுகையில்,
     ஐபிஎல் தொடரை நடத்துவதற்கான அனைத்து சாத்தியங்கள் குறித்தும், பிசிசிஐ ஆராய்ந்து வருகிறது. காலி மைதானத்திலாவது தொடரை நடத்த முடியுமா என ஆலோசித்து வருகிறோம். தொடரில் பங்கேற்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஆவலாக இருக்கிறார்கள் , ஐபிஎல் குறித்து பிசிசிஐ விரைவில் அறிவிக்கும்  என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad