• Breaking News

    ட்ரம்புக்கு ஈரான் பிறப்பித்த பிடிஆணையை 'இன்டர்போல்' நிராகரித்தது

    தனது நாட்டின்  முக்கிய படைத் தளபதியின் கொலை வழக்கில்  அமெரிக்க  ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்டோரை கைது செய்து ஒப்படைக்கும்படி  ஈரான் விடுத்த கோரிக்கையை  சர்வதேச பொலிஸ் அமைப்பான  'இன்டர்போல்  நிராகரித்தது.

    .ஈரான் ராணுவத்தின் முக்கிய படை தளபதியான  ஜெனரல்  குவாசிம் சுலைமானி  ஈராக்கின் பாக்தாதில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார். இந்தாண்டு ஜனவரியில் நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்  அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்தது.இந்நிலையில்  குவாசிம் சுலைமானி கொல்லப்பட்ட வழக்கில் அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்  உட்பட  அமெரிக்காவைச் சேர்ந்த  30க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள்  அரசியல்வாதிகளை  ஈரான் குற்றவாளிகளாக கூறியுள்ளது. அவர்கள் மீது கைது பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் உள்ளிட்டோரை கைது செய்து ஒப்படைக்கும்படிஇ இன்டர்போலின் உதவியை  ஈரான் நாடியுள்ளது.

      ஈரானின் இந்தக் கோரிக்கையை  ஐரோப்பிய நாடான பிரான்சின் லியானை தலைமையிடமாக வைத்து செயல்படும்  இன்டர்போல் நிராகரித்து விட்டது.இன்டர்போல் விதிகளின்படி  அரசியல் காரணங்களுக்கான இது போன்ற கோரிக்கைகள் ஏற்கப்படாது. அதனால்  ட்ரம்ப் கைது செய்யப்பட வாய்ப்பில்லை.இருப்பினும்  ஈரானின் இந்த நடவடிக்கை  இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad