• Breaking News

    கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் சிலி சுகாதாரத்துறை அமைச்சர் இராஜினாமா

      

    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் கொரோனா வைரஸ் தாக்கம் மிக தீவிரமாக உள்ளது.

    அங்கு 1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டில் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    அந்த நாட்டின் சுகாதாரத்துறை  அமைச்சர்  ஜெய்மி மனாலிக் கொரோனா விவகாரத்தை சரியாக கையாளாததே இதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன.

    இந்த நிலையில் சுகாதாரத்துறை மந்திரி ஜெய்மி மனாலிக் நேற்று தனது பதவியை திடீரென இராஜினாமா செய்தார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை அந்த நாட்டின் ஜனாதிபதி  செபாஸ்டியன் பினேராவிடம் வழங்கினார். அவரது  இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.

    புதிய சுகாதாரத்துறை அமைச்சராக  என்ரீக் பாரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த மருத்துவரும் அறுவைசிகிச்சை நிபுணருமான என்ரீக் பாரீஸ் கூடிய விரைவில் நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வருவேன் என உறுதி பூண்டுள்ளார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad