• Breaking News

    சவுத்தாம்ப்டன் டெஸ்ட்: 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறும் பாகிஸ்தான்

     

     இங்கிலந்துக்கு எதிராக சவுத்தாம்ப்டனில் நடைபெறும் டெஸ்ட்டின் 2 ஆம் நாள் ஆட்ட நேரமுடிவில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. 

    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது போட்டி சமநிலையில் முடிவுற்றது. 

    இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி  டெஸ்ட்போட்டி சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது. நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். 

    அதன்படி இங்கிலாந்து அணியின் ரோரி பேர்ன்ஸ், டாம் சிப்லி தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோரி பேர்ன்ஸ் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்

     

    அடுத்து வந்த ஜாக் கிராவ்லி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் டாம் சிப்லி 22 ஓட்டங்களிலும், அடுத்து வந்த ஜோ ரூட் 29 ஓட்டங்களிலும், ஒல்லி போப் 3  ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 127 ஓட்டங்களில்  நான்கு விக்கெட்களை இழந்தது. 

    5-வது விக்கெட்டுக்கு கிராவ்லி உடன் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கிராவ்லி 80 பந்தில் அரைசதமும், 171 பந்தில் சதமும் அடித்தார். 

    மறுமுனையில் பட்லர் 85 பந்தில் அரைசதம் அடித்தார். இதனால் இங்கிலாந்து முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 332 ஓட்டங்கள் குவித்துள்ளது. கிராவ்லி 171 ஓட்டங்களுடனும், பட்லர் 87 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். 

    இதையடுத்து 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியது முதலே கிராவ்லி, பட்லர் ஜோடி யின் தனது ஆதிக்கம் தொடர்ந்தது. அதிடியாக ஆடிய கிராவ்லி இரட்டை சதம் விளாசினார். பட்லரும் சதம் விளாசினார் 

    கிராவ்லி 267 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஷபிக் பந்து வீச்சில் ஆட்டமிழந்து  வெளியேறினார். அடுத்து வந்த போப் 3 ஓட்டங்களில்  வெளியேறினார்.  கிரிஷ் வோக்சுடன் ஜோடி சேர்ந்த பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 150 ஓட்டங்களை கடந்தார். பட்லர் 152 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அலாம் வீசிய பந்தில் அவரிடமே பிடி கொடுத்து வெளியேறினார். 

    இறுதியாக இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 583 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை நிறுத்தியது..

    இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிராவ்லி 267 ஓட்டங்களையும், பட்லர் 152 ஓட்டங்களையும் அடித்தனர். 

    பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அப்ரிடி, அலாம், யாசிர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்

     இதையடுத்து இங்கிலாந்தை விட 583 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆனால், தொடக்கத்திலேயே பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி காத்திருந்தது 

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷான் மசூத் 4 ஓட்டங்களுடனும், அபித் அலி 1 ஓட்டத்துடனும், ஜேம்ஸ் அண்டர்சன்னின் பந்து வீச்சில் அடுத்தடுத்து  வெளியேறினர் 

    பின்னர் பாகிஸ்தான் அணியின் கேப்ட அசார் அலியுடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். ஆனால் இந்த ஜோடியும் நீடிக்கவில்லை. பாபர் அசாம் 11 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஜேம்ஸ் அண்டர்சன் வீசிய பந்தில் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.  பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்தது 24 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

     

    அப்போது போட்டியின் 2 வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் இங்கிலாந்தை விட பாகிஸ்தான் அணி 559 ஓட்டங்கள் பின் தங்கியநிலையில் உள்ளது. 

    பாகிஸ்தான் அணியின் அசார் அலி 4 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் அண்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad