• Breaking News

    224 ஓட்ட இலக்கை விரட்டிப்பிடித்து ராஜஸ்தான் சாதனை வெற்றி

    ராஜஸ்தான் ரோயல்ஸும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதிய கிரிக்கெட் போட்டி ரசிகர்களுக்கு பெரு விருந்தாக அமைந்தது. நேற்றிரவு சார்ஜாவில் அரங்கேறிய 9-வது லீக் போட்டியில்முதலில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 223 ஓட்டங்கள் அடித்தது. இமாலய இலக்கான 224 ஓட்டங்களை வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 226 ஓட்டங்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில்வரலாற்று சாதனையுடன் வெற்றி பெற்றது.

    ராகுல் திவேஷியாவின் கடைசிநேர சிக்ஸர்கள், சஞ்சுசாம்ஸன், ஸ்மித்தின் அதிரடி ஆட்டம், ஆர்ச்சரின் சிக்ஸர்கள் ஆகியவற்றால் ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை  4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை ராஜஸ்தான் ரோயல்ஸ் பதிவு செய்தது.

      ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால், டேவிட் மில்லர் நீக்கப்பட்டு ஜோஸ் பட்லர், அங்கித் ராஜ்புத் சேர்க்கப்பட்டனர். பஞ்சாப் அணியில் மாற்றம் இல்லை. அதனால் இந்த முறையும் கிறிஸ் கெய்லுக்கு இடம் கிட்டவில்லை. நானயச்சுழற்சியில் வெற்றி பெற்ற  ஜெயித்த ராஜஸ்தான் கப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் பஞ்சாப்பை துடுப்பெடுத்தாடும்படி பணித்தார்.


     ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக கப்டன் ராகுலும்,மயங் அகர்வாலும் களம் புகுந்தனர். துடுப்பாட்டத்துக்கு உகந்த ஆடுகளம், சிறிய மைதானம் என்பதால் இருவரும் சரவெடியாய் துடுப்பெடுத்தாடினர். ஜோப்ரா ஆர்ச்சரின் ஒரு ஓவரில் ராகுல்ஹாட்ரிக்பவுண்டரி விரட்ட, திவேதியாவின் ஓவரில் அகர்வால் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி தொடர்ச்சியாக விளாசினார். ஸ்ரேயாஸ் கோபாலின் சுழலையும் அகர்வால் விட்டுவைக்கவில்லை. இதனால் பஞ்சாப் அணியின் ஓட்ட எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் எகிறியது. இவர்களை கட்டுப்படுத்த வழிதெரியாமல் ராஜஸ்தான் வீரர்கள் விழிபிதுங்கினர்.

    கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் அருமையான தொடக்கத்தை அளித்தனர். இருவரின் அதிரடி ஆட்டத்தால் பவர்ப்ளேயில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 60 ஓட்டங்கள் சேர்த்தது.

    இருவரும் முதல் விக்கெட்டுக்கு 183 ஓட்டங்கள் அடித்தனர். மயங்க் அகர்வால் 50 பந்துகளில் 106 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 7 சிக்ஸர்கள் 10 பவுண்டரிகள் அடங்கும். 26 பந்துகளில் அரைசதம் அடித்த அகர்வால் அடுத்த 24 பந்துகளில் அடுத்த 50 ஓட்டங்களை எட்டினார். கே.எல்.ராகுல் 69 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

    கடைசிக் கட்டத்தில் மேக்ஸ்வெல்லும், நிகோலஸ் பூரனும் இணைந்து ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். மேக்ஸ்வெல் 13 ஓட்டங்களிலும், பூரன் 3 சிக்ஸர் உள்ளிட்ட 25 ஓட்டங்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்புக்கு 223 ஓட்டங்கள் எடுத்தது.


      224 ஓட்டங்கள்  என்ற இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் (4 ) ஏமாற்றினார். இதன் பிறகு கப்டன் ஸ்டீவன் சுமித்தும், சஞ்சு சாம்சனும் கூட்டணி அமைத்து அதிரடி காட்டினர்.  ஒன்பது ஓவர்களில்  100 ஓட்டங்கள் எடுத்தபோது ஸ்டீவன் ஸ்மித் (50 ஓட்டங்கள், 27 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார்.

    அடுத்து வந்த ராகுல் திவேதியா ஆரம்பத்தில் தடுமாறினார். மறுமுனையில் சாம்சன் பட்டையை கிளப்பினார். மேக்ஸ்வெலின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை தெறிக்க விட்டார். ஆனால் சாம்சன் (85 ஓட்டங்கள், 42 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்) முக்கியமான கட்டத்தில் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.. இதனால் பஞ்சாப்பின் கை ஓங்குவது போல் தெரிந்தது.

    இந்த சூழலில் விசுவரூம் எடுத்த ராகுல் திவேதியா, காட்ரெலின் ஒரே ஓவரில் 5 சிக்சர்களை நொறுக்கினார். இதனால் பரபரப்பான இந்த ஆட்டம் ராஜஸ்தான் பக்கம் நகர்ந்தது. திவேதியா 53 ஓட்டங்களில் (31 பந்து, 7 சிக்சர்) விக்கெட்டை இழந்தார். இதன் பின்னர் ஜோப்ரா ஆர்ச்சரின் (13 ஓட்டங்கள்) இரு சிக்சர் வெற்றியை உறுதிப்படுத்தியது.


     

    ராஜஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ஓட்டங்கள்  குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெறது. .பி.எல். வரலாற்றில் ஒரு அணி விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு இது தான். இதற்கு முன்பு இதே ராஜஸ்தான் அணி 2008-ம் ஆண்டு டெக்கான் அணிக்கு எதிராக 215 ஓட்டங்களை விரட்டி வெற்றி பெற்றதே அதிக பட்சமாக இருந்தது.

    இந்த போட்டியின் வெற்றிக்கு முக்கியக் காரணமே கப்டன் ஸ்மித், சஞ்சு சாம்ஸன், ராகுல் திவேஷியா, ஆர்ச்சர் ஆகியோரைத்தான் கூற வேண்டும். ஒட்டுமொத்தமாக ஆட்டத்தின் போக்கை கடைசி 3-வது ஓவரிலிருந்து திவேஷியாவும், ஆர்ச்சரும் மாற்றிவிட்டனர்.

     களத்தில் இறங்கியது முதல் சிக்ஸர்களாகப் பறக்கவிட்டு, 42 பந்துகளில் 85 ஓட்டங்கள்(7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) சேர்த்த சஞ்சு சாம்ஸன் ஆட்டநாயகன் விருது பெற்றார். தொடர்ச்சியாக பெறும் 2-வது ஆட்டநாயகன் விருதாகும். சிஎஸ்கே அணியை நொறுக்கி அள்ளியபோட்டியிலும் சாம்ஸன் ஆட்டநாயன் விருது பெற்றார்.

    திவேஷியா தன்னை நிலைப்படுத்திக்கொள்ள அதிகமான பந்துகளை எடுத்துக்கொண்டார். 19 பந்துகளில் 8 ஓட்டங்கள் மட்டுேம சேர்த்தால் ஆட்டத்தில் அழுத்தம் கூடியது.

    ஒருபுறம் சாம்ஸனுக்கு வாய்ப்பு தராமல் பந்துகளை வீணடித்தார் திவேஷியா. இவரை யார் களமிறக்கியது, ஆட்டமிழந்து செல்ல வேண்டியதுதானே என்று வர்ணனையாளர்களே பேசும் அளவுக்கு திவேஷியா பொறுமையைச் சோதித்தார்.



    ஆனால், சாம்ஸன் ஆட்டமிழந்தபின் ராஜஸ்தான் ஆட்டம் முடிந்துவிட்டதாகவே பெரும்பாலும் எண்ணினர்.

    கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 18 பந்துகளில் 51 ஓட்டங்கள் தேவைப்பட்டது. காட்ரெல் வீசிய 18-வது ஓவரில் திவேஷியா ருத்தரதாண்டவம் ஆடினார்.

    லாங்கான் லெக்கில் ஒரு சிக்ஸர், ஃபுல்டாஸில் ஒரு சிக்ஸர், வைட் லாங்ஆனில் ஒருசி்க்ஸர், மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸர் என 4 சிக்ஸர்கள், 5-வது பந்து ஓட்டம் இலை 6-வது பந்தில் மறுபடியும் மிட் விக்கெட்டில் ஒருசிக்ஸர் என ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி 30 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கையே திவேஷியா மாற்றினார்.

    கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியிலும் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் கூட்டணி வலுவான அடித்தளம் அமைத்து முதல் விக்கெட்டுக்கு 183 ஓட்டங்கள் சேர்த்துப் பிரிந்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக முதல் விக்கெட்டுக்கு ஓட்டங்கள் சேர்த்த இந்திய ஜோடி எனப் பெயர் பெற்றனர்.

    இதற்கு முன் கடந்த 2017-ல் உத்தப்பா, கம்பீர் ஜோடி 158 ஓட்டங்கள் சேர்த்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. அதிரடியாக ஆடிய மயங்க் அகர்வால் 45 பந்துகளில் சதம் அடித்தார். ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த 2-வது இந்திய வீரர் எனும் பெருமையை அகர்வால் பெற்றார். இதற்கு முந் யூசுப் பதான் 37 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்து வருகிறது.

    முருகன்அஸ்வின் வீசிய 8-வது ஓவரின் 3-வது பந்தில் சாம்ஸ்ன் அடித்த பந்து சிக்ஸருக்கு செல்ல முயன்றதை பூரன், பிடித்தார். ஆனால், எல்லைக் கோட்டைத் தாண்டி விழுந்துவிட முயன்றபோது பந்தை தூக்கிவீசிவிட்டார். இதனால் சாம்ஸன் விக்கெட்டும் தப்பித்தது, சிக்ஸரும் தடுக்கப்பட்டது. பூரனின் பீல்டிங் அற்புதமாக இருந்தது.

     

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad