• Breaking News

    பெங்களூருக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வெற்றி


     

      துபாயில் நேற்றிரவு நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மல்லுகட்டின. அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் மறைவையொட்டி இரு அணி வீரர்களும் கையில் கறுப்பு பட்டை அணிந்திருந்தனர்.

    பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்லுக்கு இந்த ஆட்டத்திலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற   பெங்களூரு கப்டன் விராட் கோலி முதலில் பஞ்சாப்பை துடுப்பாடப் பணித்தார்.

    முதலில் துடுப்படுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 206 ஓட்டங்கள் அடித்தது.  207  ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 17 ஓவர்களில்சகல விக்கெட்களையும் இழந்து 109 ஓட்டங்கள் எடுத்ததால், 97 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.

    பஞ்சாப் அணியி கப்டன் ராகுலின் சதமும்,அஸ்வின் முருகன் அஸ்வின், ரவி பிஸ்னோய் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சு என்பனவற்றால் கோஹ்லியின் படை தோல்வியடைந்தது


      கேப்டன் லோகேஷ் ராகுலும், மயங்க் அகர்வாலும் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். மிதமான வேகத்தில் ஓட்டங்களை சேர்த்த இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 57 ஓட்டங்கள் (7 ஓவர்) எடுத்து பிரிந்தனர். மயங்க் அகர்வால் (26 ஓட்டங்கள்), யுஸ்வேந்திர சாஹல் வீசியகூக்ளிவகை பந்து வீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்  அடுத்து வந்து தடுமாற்றத்துடன் ஆடிய நிகோலஸ் பூரன் 17 ஓட்டங்களிலும்(18 பந்து), மேக்ஸ்வெல் 5 ஓட்டங்களிலும் வெளியேற  பெங்களூருவின் கை ஓங்கியது..

    மறுமுனையில் கப்டன் லோகேஷ் ராகுல் நிலைத்து நின்று விளையாடி அணியை நிமிர வைத்தார். ஆரம்பத்தில் பவுண்டரிகள் விரட்டுவதில் கவனம் செலுத்திய அவர் கடைசி கட்டத்தில் சிக்சர் மழை பொழிந்து ருத்ரதாண்டவமாடினார்.  ராகுல் 83 மற்றும் 89 ஓட்டங்கள் எடுத்தபோது அவர் தூக்கி அடித்த பந்துகளை கோஹ்லி தவறவிட்டதால் ராகுல் சாதித்தார்.

    கண்டத்தில் இருந்து தப்பித்த ராகுல், வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயினின் ஒரே ஓவரில் 3 சிக்சர், 2 பவுண்டரி நொறுக்கினார். அத்துடன் சதத்தையும் எட்டினார். இந்த .பி.எல்.-ல் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும். ஷிவம் துபேயின் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, இரு சிக்சர்களை தெறிக்கவிட்டு 200 ரன்களை கடக்க வைத்தார்.

    ஒரு கட்டத்தில் 180 ஓட்டங்கள் வரை தொடும் என்று கணிக்கப்பட்ட நிலையில் கடைசி 4 ஓவர்களில் 74 ஓட்டங்கள் அடித்ததால்பஞ்சாப்பின் வேகத்தை பெங்களூருவால் கட்டுப்படுத்த முடியவில்லை.

    20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்புக்கு 206 ஓட்டங்கள் எடுத்தது. லோகேஷ் ராகுல் 132 ஓஆட்ங்களுடனும் (69 பந்து, 14 பவுண்டரி, 7 சிக்சர்), கருண் நாயர் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 


      207 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணியின் வீரகள் வரிசையாக மைதானத்தை விட்டு வெளியேறியதால் நெருக்கடியில் சிக்கியது.

    தேவ்தத் படிக்கல் (1 ஓட்டம்), ஜோஷ் பிலிப் (0), கேப்டன் விராட் கோலி (1 ஓட்டம்), ஆரோன் பிஞ்ச் (20 ஓட்டங்கள்), டிவில்லியர்ஸ் (28 ஓட்டங்கள்) ஆகிய முன்னணி வீரர்கள் வரிசையாக நடையை கட்டியதும் பஞ்சாப் உற்சாகமடைந்தது.

    17 ஓவர்களில் அந்த அணி 109 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் பஞ்சாப் அணி 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரவி பிஷ்னோய், முருகன் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளும், காட்ரெல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    2-வது போட்டியில் விளையாடிய பஞ்சாப் அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். தனது முதல் ஆட்டத்தில் டெல்லியிடம் தோற்று இருந்தது. அதே சமயம் 2-வது ஆட்டத்தில் விளையாடிய பெங்களூருவுக்கு இது முதல் தோல்வியாகும்.

    ஐபிஎல் வரலாற்றில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பெறும் 2-வது மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இரு ஐபிஎல் சீசன்களுக்குப்பின் கோலியின் ஆர்சிபி அணியை பஞ்சாப் அணி வீழ்த்தியுள்ளது.

    கடந்த 2011-ம் ஆண்டு ஆர்சிபி அணிக்கு எதிராக 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றதே பஞ்சாப் அணியின் அதிகபட்ச  வெற்றியாக இருந்தது. இந்த ஆட்டத்தில் 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது 2-வது அதிகபட்ச ரன்கள் வெற்றியாகும்.

    14 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உள்பட 69 பந்துகளில் 132 ஓட்டங்கள் சேர்த்து  வெற்றிக்கு முக்கியக் கராணமாக அமைந்த ராகுல். ஆட்டநாயகன் விருதையும் ராகுல் பெற்றார். அரைசதத்தை 36 பந்துகளில் எட்டிய ராகுல், அடுத்த 26 பந்துகளில் அடுத்த 50 ஓட்டங்கள் அடித்து சதத்தை நிறைவு செய்தார்.

    ஐபிஎல் போட்டிகளில் ராகுல் அடிக்கும் 2-வது சதம் இதுவாகும். இதற்கு முன் கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ராகுல் 63 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.

    அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு இந்திய வீரர் பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர் ராகுல் நேற்று அடித்த 132 ஓட்டங்களாகும்.ஐபிஎல் போட்டிகளில் ஒரு சதத்துக்கு மேல் அடித்த 6-வது இந்திய வீரர் எனும் பெருமையை ராகுல் பெற்றார். குறிப்பாக ஐபிஎல் வரலாற்றில் ஓர் அணிக்கு கப்டனாக இருக்கும் வீரர் ஒருவர் அடிக்கும் அதிகபட்ச ஸ்கோரையும் ராகுல் நேற்று பதிவு செய்தார்.

    ஐபிஎல் வரலாற்றில் மிக வேகமாக 2 ஆயிரம் ஓட்டங்களை எட்டிய வீரர் எனும் பட்டியலி்ல் சச்சின் டெண்டுல்கர் 63 இன்னிங்ஸில் சாதனை செய்திருந்தார். ஆனால், சச்சின் சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல் 60 இன்னிங்ஸில்2 ஆயிரம் ஓட்டங்களை எட்டினார். ஆனால், கெயில் 48 இன்னிங்ஸில் 2 ஆயிரம் ஓட்டங்கள் அடித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad