• Breaking News

    சூப்பர் ஓவரில் பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி கப்பிட்டல்ஸ்


     

    ஐபிஎல் சீசனில் சூப்பர் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி கேப்பிட்டல்ஸ்

     

    துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சிலும் ஜொலித்த ஸ்டாய்னிஷ், ரிஷப்பந்த், ஸ்ரேயாஸ் அய்யரின் பாட்னர்ஷிப், சூப்பர் ஓவர் ஹீரோ ரபாடாவின் பந்துவீச்சு ஆகியவற்றால், துபாயில் நேற்று நடந்த 13-வது சீசன் ஐபிஎல் ரி20 போட்டியின் 2-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி  வெற்றி பெற்றது டெல்லி கப்பிட்டல்ஸ் அணி.

    ஐபிஎல் தொடரின் 2-வது ஆட்டமே ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிறவைக்கும் ஆட்டமாக நேற்று இருந்தது. ஆட்டத்தின் கடைசியில் 3 பந்துகளுக்கு முன்பு வரை அதாவது மயங்க் அகர்வால் களத்தில் இருக்கும் வரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் வென்றுவிடும் என்று ரசிகர்கள் எண்ணினர். ஆனால், ஸ்டாய்னிஸ் வீசிய கடைசி 3 பந்துகள் ஆட்டத்தை தலைகீழாக மாற்றிவிட்டன.


    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நாணயச்சுழற்சியில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. டெல்லி கப்பிட்டல்ஸ் அணி களமிறங்கியது. முன்னணி வீரர்களான பிரித்வி ஷா, ஷிகர் தவான், சிம்ரோன் ஹெட்மையர் ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர். 

    4-வது விக்கெட்டுக்கு கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. அதேசமயம் அடிக்கக்கூடிய பந்தை அடித்து விளையாடியது. ரிஷப் பண்ட் 31 ஓட்டங்களிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 39 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். 

    இறுதி கட்டத்தில் ஆல்-ரவுண்டர் ஸ்டாய்னிஸ் அதிரடி காட்டினார். அவர் 20 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் கடந்தார். ஸ்டாய்னிஸ் 21 பந்தில் 53 ஓட்டங்கள் விளாசினார். 

    இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. 

    பஞ்சாப் அணி சார்பில் முகமது ஷமி 4 ஓவரில் 15 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களும், காட்ரெல் 24 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களும், ரவி பிஷ்னோய் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    இதையடுத்து, 158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. 


    தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 21 ஓட்டங்களில் வெளியேறினார்.. அடுத்து வந்த வீரர்கள் விரைவில் வெளியேறினர். இதனால் அந்த அணி 5 விக்கெட்டுக்கு 55 ஓட்டங்களை எடுத்து தத்தளித்தது. 

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் தனியாக போராடினார். கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சராக பறக்கவிட்டார். அவர் இறுதி வரை போராடினார். அகர்வால் 60 பந்தில் 89 ஓட்டங்கள்  குவித்து ஆட்டமிழந்தார். 

    இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது 

     வீசப்பட்ட சூப்பர் ஓவரில் மீண்டும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் துடுப்பெடுத்தாடியது. பூரன், கேஎல் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். சூப்பர் ஓவர் ஹீரோ ரபாடா வீசிய முதல் பந்தில் ராகுல் 2 ஓட்டங்கள் எடுத்தார்.

    2-வது பந்து பவுன்ஸராக வர அதை தூக்கி அடிக்க முற்பட்டு ராகுல் ஆட்டமிழந்தார். 3-வது பந்தை பூரன் எதிர்கொண்டார். ரபாடாவின் துல்லியமான இன்ஸ்விங்கில் விக்கெட்டைப் பரிகொடுத்து வெளியேறினார்.


    சூப்பர் ஓவரில் 3ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் டெல்லி கப்பிட்டல்ஸ் ப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் களமிறங்கினர். ஷமி வீசிய ஒருபந்து வைடாகச் சென்றதில் ஒரு ஓட்டம் கிடைத்தது. அடுத்து எளிதாக 2 பந்துகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

     

     

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad