• Breaking News

    மூன்றாவது போட்டியிலும் தோற்றது சென்னை


     

      துபாயில் நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ஹைதராபாத் சன்ரைசர்ஸும் மோதுன. சென்னை அணியில் மூன்று மாற்றமாக முரளிவிஜய், ருதுராஜ் கெய்க்வாட், ஹேசில்வுட் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக காயத்தில் இருந்து குணமடைந்த அம்பத்தி ராயுடு, வெய்ன் பிராவோ, ஷர்துல் தாகூர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். 

    நானயச் சுழற்சியில் வெற்றை பெற்ற ஹைதராபாத் அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்ந்தெடுத்தது. 

    டேவிட் வானரும், ஜானி பேர்ஸ்டோவும் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக நுழைந்தனர். தீபக் சாஹரின் முதல் ஓவரிலேயே பேர்ஸ்டோ (0) ஆட்டம் இழந்தார். இன்ஸ்விங்காக சீறிய அந்த பந்து அவரது காலில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. அடுத்து வந்த மனிஷ் பாண்டே அதிரடியாக ஆடினாலும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அவர் 29 ஓட்டங்களில் (21 பந்து, 5 பவுண்டரி) வெளியேறினார். 

    மறுமுனையில் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த கப்டன் வானர்  28 ஓட்டங்கலில் ஆட்டம் இழந்தார். அடுத்த பந்தில் பாதி தூரம் ஓடிவிட்டு திரும்பிய போது 9 ஓட்டங்கள் எடுத்த வில்லியம்சன் ரன்-அவுட் ஆனார்.ஹைதராபாத் 11 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 69 ஓட்டங்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்தது.


     

    ஹைதராபாத்தின் கதை முடிந்தது என்ற சூழலில் இளம் வீரர்களான பிரியம் கார்க்கும், அபிஷேக் ஷர்மாவும் ஜோடி சேர்ந்து ஹைதராபாத்தை மீட்டெடுத்தனர். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்கள் சென்னையை மிரள வைத்தனர். சாம் கர்ரனின் ஒரே ஓவரில் பிரியம் கார்க் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார் சென்னை அணியின் கலத்தடுப்பு மிக மோசமாக இருந்தது. அபிஷேக் ஷர்மாவுக்கு 26 ஓட்டங்கள் எடுத்தபோது  ஜடேஜாவும், 30 ஓட்டங்களில் ஷர்துல் தாகூரும் எளிதான பிடியை நழுவ விட்டனர். 

    ஹைதராபாத்தின் ஓட்ட எண்ணிக்கை 146 ஓட்டங்களாக இருந்தபோது 24 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்த அபிஷேக் ஷர்மா  ஆட்டமிழந்தார். மறுபுறத்தில் 19 வயதான பிரியம் கார்க் ஐ.பி.எல்.-ல் தனது முதலாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இவர் 19 வ்யதுகுட்பட்ட இந்திய அணியின் கப்டனாவார்.

    20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்கள் அடித்தது. பிரியம் கார்க் 51 ஓட்டங்களுடனும் (26 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), அப்துல் சமத் 8 ஓட்டங்களுனும் களத்தில் இருந்தனர். சென்னை தரப்பில் தீபக் சாஹர் 2 விக்கெட்களையும், ஷர்துல் தாகூர், பியுஷ் சாவ்லா  ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.


     

      165 ஓட்டங்கள்  எனும் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி தடுமாறியது. ஷேன் வாட்சன் (1ஓட்டம்) புவனேஷ்வர் குமாரின் பந்து வீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் பிளிஸ்சிஸ் (22 ஓட்டங்கள்) ரன்-அவுட்டில் வெளியேறினார்.  அம்பத்தி ராயுடு 8 ஓட்டங்களிலும், கேதர் ஜாதவ் 3 ஓட்டங்களிலும் ஆட்டம் இழக்க சென்னை அணி பரிதவித்தது. முதல் 10 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட்களை இழந்து 44 ஓட்டங்கள்  மட்டுமே எடுத்தது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் முதல் 10 ஓவர்களில் ஒரு அணியின் மந்தமான ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். 

    5-வது விக்கெட்டில் இணைந்த கப்டன் டோனியும், சகலதுரைவீரர் ரவீந்திர ஜடேஜாவும் கைகோர்த்து அணியை மீட்க போராடினர். ஆனால் ரஷித்கானின் சுழலில் திணறியதால் ஓட்ட எண்ணிக்கை எகிரவில்லை. 15-வது ஓவருக்கு பிறகு டோனியும், ஜடேஜாவும் கொஞ்சம் தீவிரம் காட்டினர். குறிப்பாக ஜடேஜா, புவனேஷ்வர் குமாரின் பந்து வீச்சில் ஹாட்ரிக் பவுண்டரி, நடராஜனின் பந்து வீச்சில் சிக்சர் என்று தனது முதலாவது ஐ.பி.எல். அரைசதத்தை எட்டினார். ஜடேஜா 50 ஓட்டங்களில் (35 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். இதன் பிறகு 19-வது ஓவரில் ஒரு பவுண்டரியும், சிக்சரும் டோனி அடித்தாலும் நெருக்கடி தணியவில்லை.


     

    வெற்றிக்கு, கடைசி ஓவரில் 28 ரன் தேவைப்பட்டது. இந்த ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் அப்துல் சமத் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து தங்கள் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். 

    சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஐதராபாத் அணி 7 ஓட்ட வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது. டோனி 47 ஓட்டங்களுடனும் (36 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), சாம் கர்ரன் 15 ஓட்டங்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். 4-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.

      சென்னை அணி தொடர்ந்து 3 ஆட்டங்களில் தோற்பது 2014-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

     

     

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad