• Breaking News

    கடும் நிதி நெருக்கடியில் அரசாங்கம் - மூன்று நாடுகளிடம் அவசர கடனுதவி

    இலங்கை மத்திய வங்கியின் அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாகக் குறைந்து வருவதால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கான குறுகிய கால நடவடிக்கையாக அடுத்த இரண்டு மாதங்களில் மூன்று நாடுகளிடமிருந்து 215 பில்லியன் அமெரிக்க டொலர் அவசர கடனைப் பெற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

    இதன்படி இந்தியாவில் இருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், பங்களாதேஷில் இருந்து 250 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், சீனாவிலிருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் பெறவுள்ளது.

    பண பரிமாற்ற வசதிகள் மூலம் இந்தியா மற்றும் பங்களாதேஷிலிருந்து 650 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 400 மில்லியன் டொலர் பரிவர்த்தனை கடன் வசதி ஒன்பது மாத திருப்பிச் செலுத்துதல் அடிப்படையில் இரண்டு தவணைகளில் பெறப்படும், அதே நேரத்தில் பங்களாதேஷில் இருந்து 250 மில்லியன் டொலர் பரிமாற்ற கடன் வசதி மூன்று கட்டங்களாகப் பெறப்படும்.

    அரசாங்க வட்டாரங்களின்படி, சீனாவிடமிருந்து 1,500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் நீண்ட கால கடனாக பெறப்பட உள்ளது.

    இதற்கிடையில், இந்த மாதத்தில் செலுத்த வேண்டிய 1 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கடன்கள் திருப்பிச் செலுத்தப்பட உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இலங்கையின் மத்திய வங்கியின் அந்நிய செலாவணி இருப்பு சுமார் 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக சுருங்கிவிட்டது, இது மூன்று மாத இறக்குமதிக்கு மட்டுமே போதுமானது என்று அரசாங்கம் சமீபத்தில் தெரிவித்துள்ளது.

    மீதமுள்ள காலகட்டத்தில் அந்நிய செலாவணி வருவாயில் கணிசமான அளவு எதிர்பார்க்கப்படாததாலும் அந்நிய செலாவணி கடன்கள் திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதாலும், எதிர்காலத்தில் அந்நிய செலாவணி இருப்பு மேலும் வீழ்ச்சியடையும் என்றும் மத்திய வங்கி அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad