• Breaking News

    யாழிலும் இறந்த நிலையில் கரையொதுங்கும் உயிரினங்கள்!

    யாழ்ப்பாணம் - புங்குடுதீவு, நடுத்துருத்தி கடற்கரையில் இறந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

    குறித்த கடலாமை இறந்த நிலையில் நேற்றைய தினம் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று காலை குறித்த பகுதிக்கு சென்ற வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கடலாமையினை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

    கரையொதுங்கிய கடலாமை 38 இஞ்சி நீளமும், 27 இஞ்சி அகலமும் மற்றும் 76 இஞ்சி சுற்றளவுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.








    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad