• Breaking News

    யாழ். மீசாலையில் வாள்வெட்டு! - ஒருவர் படுகாயம்

     யாழ். மீசாலைப் பகுதியில் நேற்று (2021.07.14) இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருபவர் படுகாயம் அடைந்துள்ளார்.

    மீசாலைக்கும் சாவகச்சேரிக்கும் இடைப்பட்ட ஐயா கடையடிப் பகுதியில் நேற்று இரவு 8.00 மணியளவில் குறித்த வன்முறை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    சம்பவத்தில் அந்தப் பகுதியில் அழகுசாதன வர்த்த நிலையம் நடாத்தும் 35 வயதுடைய வர்த்தகர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

    இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad