• Breaking News

    கொழும்பில் ஏற்பட்ட பதற்ற நிலை - பெருமளவானோர் அதிரடியாக கைது!

     பத்தரமுல்லை நாடாளுமன்ற சுற்று வட்ட பகுதியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

    தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறி நடைபெற்ற இந்த போராட்டத்தில் பங்கேற்ற இரண்டு துறவிகள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்குள் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

    ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட சட்டத்திற்கு எதிராக இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad