• Breaking News

    அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் நடத்துனர்கள் நடு வீதியில் மோதல்!

     இலங்கை போக்குவரத்து சபை கிளிநொச்சி சாலை பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் தனியார் பேருந்து சாரதி, நடத்துனர் உள்ளிட்டோருக்கிடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

    இன்று காலை 06.20 மணியளவில் ஏ9 வீதி கரடிப்போக்கு சந்தியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின்போது இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர்  காயமடைந்ததாக தெரிவித்து  கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் .

    சம்பவத்தின் போது பயணிகள் பேருந்துகளில் இருந்துள்ளனர். எனினும் அவர்களிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன், இரு தரப்புக்கும் இடையில் நேர அட்டவணை மற்றும் வழி அனுமதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முரண்பாடுகள் நீண்ட காலமாக உள்ளமையும் குறிப்பிடத்த்தது.

    சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.






    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad