• Breaking News

    யாழ். மாநகர சபை முன்பாக உண்ணாவிரதப் போராட்டம்!

     யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர சபை உறுப்பினர்களான ரஜீவ்காந், கிருபாகரன் ஆகிய இருவரும் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

    சபையின் உறுப்பினரான ரஜீவ்காந்தின் வட்டார  அபிவிருத்தி நிதியை அரசியல் பழிவாங்கல் காரணமாக நிறுத்தி வைத்திருக்கும் முதல்வரின் அராஜக செயற்பாட்டை கண்டித்து இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் முதல்வர், திட்டமிட்ட வகையில் அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பில் தாம் உள்ளுராட்சி ஆணையாளர் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் முறையிட்டு உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    தமக்கான நீதி கிடைக்காவிட்டால் இப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad