• Breaking News

    கப்டன் பொறுப்பிலிருந்து தினேஷ் கார்த்திக் திடீர் விலகல்


     

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கப்டன் பொறுப்பிலிருந்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் விலகியுள்ளார். அதற்குப் பதிலாக கப்டன் பொறுப்பை இங்கிலாந்து அணியின் கப்டன் இயான் மோர்கன் ஏற்றுள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் நேற்று நடக்க இருக்கும் நிலையில் இந்த   மாற்றம் நடந்துள்ளது.

    ஐபிஎல் டி20 தொடர் 2-வது பாதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. எந்த 4 அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்குச் செல்லும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது

    கொல்கத்தா அணி வெற்றி பெற்ற 4 போட்டிகளிலும் தினேஷ் கார்த்திக்கு உதவியாக ஃபீல்டிங் செட் செய்ததிலும், தேவையான ஆலோசனைகள் வழங்கியதிலும் இங்கிலாந்து கப்டன் மோர்கனின் பங்கு முக்கியமானது. அதை தினேஷ் கார்த்திக்கே ஒப்புக்கொண்டு பேட்டி அளித்திருந்தார்.

    மேலும், இந்தத் தொடரில் தினேஷ் கார்த்திக் ஒரு போட்டியில் மட்டுமே அரை சதம் அடித்துள்ளார். மற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை. சிஎஸ்கே அணிக்கு எதிராக வெற்றி பெற்ற ஆட்டத்தில் கூட மோர்கனின் ஆலோசனைகள்தான் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு உதவின.

    தினேஷ் கார்த்திக் கப்டன் பொறுப்பை மோர்கனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரும் வலியுறுத்தியிருந்தார். அது தொடர்பான பேச்சுகளும் சமூக ஊடகங்களில் ஓடியநிலையில் தினேஷ் கார்த்திக் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

    இதுகுறித்து தினேஷ் கார்த்திக் அளித்த பேட்டியில், “நான் பேட்டிங்கில் கவனம் செலுத்தப்போகிறேன். அணியின் வெற்றிக்கு அதிகமாகப் பங்களிக்கப் போகிறேன்எனத் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad