• Breaking News

    பெங்களூருவுக்கு மூன்றாவது வெற்றி


       அபுதாபியில் நேற்று மாலை நடந்த 15-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணி, ராஜஸ்தான் ரோயல்ஸை எதிர்கொண்டது.

    கோஹ்லி, படிக்கலின் அருமையான துடுப்பாட்டம், சாஹலின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 15-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

    நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அக்ப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் துடுப்பாடப்போவதாக அறிவித்தார். ராஜஸ்தானுக்கு தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை. அபாயகரமான வீரர்களான ஸ்டீவன் ஸ்மித்தும் (5 ஓட்டங்கள்), சஞ்சு சாம்சனும் (4 ஓட்டங்கள்) ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரும் (22 ஓட்டங்கள்) நிலைக்கவில்லை. இதனால் ராஜஸ்தான் அணி  3 விக்கெட்டுகளை இழந்து 31  ஓட்டங்கள் எடுத்து சிக்கலில் தவித்தது. ரொபின் உத்தப்பாவும் 17 ஓட்டங்கள்  எடுத்து ஆட்டமிழந்தார். யுஸ்வேந்திர சாஹலும், வாஷிங்டன் சுந்தரும் தங்களது சுழல் ஜாலத்தில் எதிரணியின் வேகத்தை வெகுவாக கட்டுப்படுத்தினர்.


      மத்தியில் இளம் வீரர் மஹிபால் லோம்ரோர், பின்வரிசை வீரர்கள் ஓரளவு தாக்குப்பிடித்து அணியை கவுரவமான நிலைக்கு உயர்த்தினர். லோம்ரோர் 47 ஓட்டங்கள் ராகுல் திவேதியா  24 ஓட்டங்கள்  எடுத்து ஆட்டமிழந்தனர்.

    20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்களை இழந்துகு 154 ஓட்டங்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்களும், உதனா 2 விக்கெட்களும் கைப்பற்றினர். வாஷிங்டன் சுந்தர் விக்கெட் எடுக்காவிட்டாலும் 4 ஓவர்களில் 20 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கனத்தை காட்டினார்.

       155 ஓட்டங்கள் எனும் வேற்ரி இலக்கை நோக்கி பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பிஞ்சும், தேவ்தத் படிக்கல்லும் களம் புகுந்தனர். ஆரோன் பிஞ்ச் (8 ஓட்டங்கள்) ஸ்ரேயாஸ் கோபாலின் சுழற்பந்து வீச்சில் 3-வது ஓவரில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இந்த சீசனில் ‘பவர்-பிளே’யில் ஆட்டம் இழக்காத ஒரே தொடக்க வீரராக வலம் வந்த ஆரோன் பிஞ்சின் பெருமை முடிவுக்கு வந்தது.

    அடுத்து படிக்கல்லுடன், கப்டன் விராட் கோஹ்லி இணைந்தார். முந்தைய ஆட்டங்களில் ஏமாற்றிய கோஹ்லி இந்த ஆட்டத்தில் சுதாரிப்புடன் ஆடி தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு துரத்தியடித்தார். நேர்த்தியாக ஆடிய இந்த ஜோடி வெற்றிப்பாதையை சுலபமாக்கியது. நடப்பு தொடரில் 3-வது அரைசதத்தை கடந்த தேவ்தத் படிக்கல் 63 ஓட்டங்களில் (45 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.அடுத்து இறங்கிய டிவில்லியர்ஸ் பவுண்டரியுடன் ஆட்டத்தை முடித்து வைத்தார்.


    பெங்களூரு அணி 19.1 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி 72 ஓட்டங்களுடனும் (53 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), டிவில்லியர்ஸ் 12 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

    பெங்களூரு வீரர் யுஸ்வேந்திர சாஹல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 4-வது லீக்கில் ஆடிய பெங்களூரு அணிக்கு இது 3-வது வெற்றியாகும். ராஜஸ்தானுக்கு இது 2-வது தோல்வியாகும்.

    கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து முதல் 4 போட்டிகளில் 3 போட்டிகளில் ஆர்சிபி அணி இப்போதுதான் வெற்றி பெற்றுள்ளது. 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலி்ல் முதலிடத்துக்கு ஆர்சிபி அணி முன்னேறியுள்ளது.

    கடந்த 3 போட்டிகளில் துடுப்பாட்டத்தில் தடுமாறிய கப்டன் கோஹ்லி இந்தப் போட்டியில் அசத்தியஹு வெற்றிக்கு முக்கியக் காரணம். இளம் வீரர் தேவ்தத் படிக்கல்  தொடர்ச்சியாகமூன்றாவது அரை சதத்தைப் பதிவு செய்து வெற்றிக்குத் துணையாக இருந்தார். கோஹ்லியுடன், படிக்கல் அமைத்த இணைப்பாட்டம் ராஜஸ்தான் அணிக்குப் பெரும் தலைவலியாக இருந்தது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad