• Breaking News

    1இலட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வருகை



    2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 101,192 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

    பிப்ரவரி 2020க்குப் பிறகு ஒரே மாதத்தில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்தது இதுவே முதல் முறையாகும் என தெரிவிக்கப்படுகின்றது.


    அதன்படி, 2022 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டிற்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 280,026 ஆகும்.


    இதேவேளை, மார்ச் 2022 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடு இந்தியாவாகும். அந்த எண்ணிக்கை 22,231 ஆகும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad