• Breaking News

    இன்று முதல் எரிபொருள் நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு



    இன்று முதல் அனைத்து சிப்பெட்கோ (CEYPETCO) எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இராணுவத்தினர் எரிபொருள் விநியோகத்தை மேற்பார்வை செய்வதற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

    எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் நிற்பதே இதற்கு காரணமாகும்.

    இதனை அடுத்தே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தீவிர கண்காணிப்புகளை மேற்கொள்ளும் நோக்கில் இராணுவத்தினரை ஈடுபடுத்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad