• Breaking News

    மே. இந்தியாவா? இந்தியாவா? பலப்பரீட்சை


    இந்திய-மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான தீர்க்கமான ஒரு நாள் போட்டி இன்று கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
    இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் இடம்பெற்று வருகிறது.

    கொச்சியில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று முன்னிலை பெற்றது. விசாகப்பட்டணத்தில் இடம்பெற்ற 2ஆவது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி போராடி வென்றது.

    இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, இறுதி ஒருநாள் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகின்றது.

    இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி களத் தடுப்பை தேர்வு செய்துள்ளது.

    அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 263 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

    தற்போது மதியவேளைக்காக ஆட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 264 என்ற ஓட்ட எண்ணிக்கை மேற்கிந்தியத் தீவுகளால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

     -----------------------------------------------

    Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

    If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


    Get in Touch With Us to Know More

    kindpng_1122282

    Brand-Center_-social-icons_join-us-community-icon_purple

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad