• Breaking News

    அடுத்தாண்டு வரை எல்லையை மூட வாய்ப்பு அவுஸ்திரேலியா

    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க உலக நாடுகள் அனைத்தும் எல்லைகள் மூடி ஊரடங்கினை அமல்படுத்தின. ஆனாலும், கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நியூஸிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தற்போது வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எல்லைகளை கண்காணிக்க அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். 

    அவுஸ்திரேலியாவில் இதுவரை 7,370 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 102 பேர் உயிரிழந்தனர், 6,859 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பரவலை கிட்டத்தட்ட கட்டுப்படுத்தினாலும், அடுத்த ஆண்டுவரை எல்லையை திறக்க வாய்ப்பில்லை என்று அவுஸ்திரேலிய சுற்றுலாத்துறை அமைச்சர் சைமன் பிர்மின்காம்  

      தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,   

    சுற்றுலா தொடர்பான அவுஸ்திரேலியாவுக்கு உள்ளே மற்றும் வெளியே பயணம் என்பது மிகவும் கவலையானது என்று நான் நினைக்கிறேன். கொரோனா வைரஸ் தொற்றை அவுஸ்திரேலியா வெல்வதற்கு நாட்டின் எல்லையை மூடியது ஒரு முக்கியமான காரணமாகும். விரைவில் பொது பயணத்திற்காக அது திறந்து விடப்படாது’’ என்றார்.

    நீங்கள் கூறுவது பார்க்கும்போது அடுத்த ஆண்டு வரைக்கும் நாட்டின் எல்லை திறக்கப்படாது என்று எடுத்துக் கொள்ளலாமா? என்ற கேள்விக்கு, ‘‘அதற்கு அதிக வாய்ப்புள்ளதாக நினைக்கிறேன்’’என்றார். 

    இதனால் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியா வெளிநாட்டுக்கான  எல்லையை திறக்காது என்பது புலப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad