• Breaking News

    டோனியாக நடித்தவர் தற்கொலை

     

    பிரபல இந்தி நடிகரும் மகேந்திர சிங் டோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமானதோனி: தி அன்டோல்ட் ஸ்டோரிதிரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவருமான இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டார். மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

    அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மரணத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான இவர் 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான, “காய் போ சேதிரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பி.கே, ராப்தா, கேதர்நாத் உள்ளிட்ட பல திரைப்படங்களின் நடித்துள்ள இவர் தோனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக அறியப்பட்டார். 

    பாலிவுட் திரையுலகில் முன்னனி நடிகராக திகழ்ந்த 34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புட் பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர் ஆவார். இவரது மரணம் திரையுலக பிரபலங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

     

    சுஷாந்த்சிங்கிங் முன்னாள் பெண் மேனேஜர் கடந்த ஜூன் 8 ஆம் திகiதி இதேபோல் தற்கொலை செய்து கொண்டார். அவர் பெயர் திஷா சலியான். மும்பையில் 14 மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து அவர் கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. இது தொடர்பாக நிறைய மர்மங்கள் நிலவி வருகிறது. என்ன மர்மம் இந்த நிலையில் தற்போது சரியாக சுஷாந்த்சிங் மரணம் அடைந்து உள்ளார். இவரின் மரணத்திற்கு உண்மையில் மன அழுத்தம்தான் காரணமா என்று கேள்வி எழுந்துள்ளது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad