ஜார்ஜ் பிளாய்ட்டின் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு
போலீஸ்
அத்துமீறலில் கொல்லப்பட்ட ஆப்ரிக்க அமெரிக்கரான ஜார்ஜ்
பிளாய்டுக்கு அமெரிக்க மக்கள் கண்ணீர் மல்க
விடைகொடுத்து வருகின்றனர். அவருடைய இறுதிச் சடங்குகளை
நடத்துவதற்கு சொந்த
ஊரான ஹூஸ்டனில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின்
மினியாபொலிசில் பொலிஸ் அதிகாரி
ஒருவர் தன் முழங்காலால் கழுத்தில்
நெருக்கியதால் ஜார்ஜ்
பிளாய்டு என்ற ஆப்ரிக்க அமெரிக்கர்
உயிரிழந்தார். இது கறுப்பின
மக்களுக்கு எதிரான இனவெறியை காட்டுவதாக
கூறிஇ நாடு முழுதும் போராட்டங்கள்
வெடித்தன.
தொடர்ந்து 10 நாட்களுக்கு
மேலாக வன்முறை
வெடித்து அமெரிக்காவில்
பதற்றம் நிலவியது.கடந்த சில நாட்களாக
வன்முறைகள் குறைந்தன; ஆனாலும் போராட்டங்கள்
தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த
நிலையில் ஜார்ஜ்
பிளாய்டின் உடல் அவருடைய
சொந்த ஊரான ஹூஸ்டனுக்கு கொண்டு
வரப்பட்டது.அங்கு அவருக்கு
இறுதிச் சடங்குகள் நடத்துவதற்கு பொலிஸ்
பாதுகாப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பிளாய்டின் குடும்பத்தவரும், நண்பர்களும்
ஹூஸ்டன் வந்து சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. ஹூஸ்டனில் பிளாய்டினுடைய
தாயின் சமாதிக்கு அருகில் அவருடைய
உடலடக்கம் நடக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை