• Breaking News

    கவுண்டமணியுடன்.. பத்ரிநாத்

    கிறிக்கெற் வீரர் பத்ரிநாத்துக்கு.. மருத்துவமனைக்கு போன இடத்தில் நகைச்சுவை மன்னர் கவுண்டமணியை எதேச்சையாக சந்திக்க நேர்ந்ததால் னிழ்ச்சியாகி  விட்டார் பத்ரிநாத். தமிழகத்தைச் சேர்ந்த கிறிக்கெற் வீரர் பத்ரிநாத். தமிழக அணிக்காகவும், ரஞ்சிக் கோப்பை, ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்காக ஆடியவர். இப்போது வர்ணனையாளராகவும் இருக்கிறார். சமீபத்தில் நடிகர் கவுண்டமணியை சந்திக்க நேர்ந்ததால்  உடனே போட்டோ எடுத்து டிவிட்டரிலும் போட்டுள்ளார்.

     அந்த போட்டோவை தற்போது டிவிட்டரில் போட்டுள்ளார். அதில், பல் டாக்டரைப் பார்க்கப் போன இடத்தில் எதிர்பாராதவிதமாக நகைச்சுவை நடிகர் கவுண்டமணியை பார்த்தேன். மகிழ்ச்சியான சந்திப்பு.. அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் அப்பா என்று டிவீட் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்

     கவுண்டமணி ஒரு படத்தில் இசையமைப்பது போல வரும் காட்சியை ஜிப் ஆக எடுத்து அதைப் போட்டு பத்ரிநாத் இப்போது என்று கூறி பத்ரியைக் கலாய்த்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த கமெண்டுக்கு ரசிகர்கள் பதில் கமெண்ட் கொடுக்க அந்த இடமே காமெடிக் கச்சேரியாக மாறிக் காணப்படுகிறது. ஆக மொத்தம் லாக்டவுன் சமயத்தில் இப்படிப்பட்ட பொழுதுபோக்குகளும் அவசியம்தான்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad