• Breaking News

    சத்தியக்காடு மீன், கோழி இறைச்சி சந்தை கட்டடம் திறப்பு!

     


    வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட சத்தியக்காடு மீன், கோழி இறைச்சி மற்றும் கருவாட்டு சந்தை கட்டடட தொகுதியானது இன்றையதினம், வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் அவர்களால் சம்பிரதாயபூர்வமாகா நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

    இந்த கட்டட தொகுதிக்கான அடிக்கல்லானது கடந்த 2022.02.07 அன்று கௌரவ தவிசாளர் அவர்களால் நாட்டிவைக்கப்பட்டது. இந்நிலையில் கட்டட வேலைகள் பூர்த்தியாகிய நிலையில் இன்றையதினம் கட்டடமானது திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

    ரூபா 10.91 மில்லியன் செலவில் பிரதேச அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் இந்த கட்டடம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

    எமது வாட்ஸப் குழுமத்தில் இணைந்து செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு இங்கே அழுத்துங்கள்






    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad