• Breaking News

    பாடசாலை மாணவி வன்புணரப்பட்டு படுகொலை - DNA பரிசோதனையின் பின்னர் சந்தேகநபர் கைது!

     


    15 வயதுடைய பாடசாலை மாணவி கற்பழித்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் DNA பரிசோதனையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    குறித்த நபர் நேற்று எஹலியகொட பொலிஸாரால் பலீகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    2009 ஆம் ஆண்டு எஹலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் பாடசாலைச் சீருடையுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

    கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எஹலியகொட பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

    சந்தேக நபர் இன்று அவிஸ்ஸாவல மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

    எமது வாட்ஸப் குழுமத்தில் இணைந்து செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு இங்கே அழுத்துங்கள்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad