• Breaking News

    சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி!

     


    நுவரெலியா, மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளன்டில் தோட்டத்தின் கீழ்ப் பிரிவில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

    மஸ்கெலியா பிரதேசத்தை சேர்ந்த 27, 38, 39 மற்றும் 42 வயதுகளையுடைய நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

    பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

    சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad