• Breaking News

    நிழலில் நல்லவன் நிஜத்தில் கொலைகாரன், நடிகர் சூர்யா மீது பரபரப்பு புகார்


    சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் முருகராஜா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது, 




    சரவணன் என்கிற சூர்யா, என்ற பெயரில் நான் சினிமா படம் தயாரித்து, இயக்கி, நானே கதாநாயகனாகவும் நடித்துள்ளேன். இந்த படத்தின் தலைப்பை முறையாகவும் பதிவு செய்துள்ளேன். இந்த சூழ்நிலையில் படத்தின் தலைப்பை மாற்றச்சொல்லி, நடிகர் சூர்யா தரப்பில் இருந்து எனக்கு வற்புறுத்தல் வந்தது.

    நான் படத்தின் தலைப்பை மாற்ற மறுத்துவிட்டேன். இதனால் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. அடியாட்கள் மூலம் நடிகர் சூர்யா என்னை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுகின்றார். படத்தையும் வெளியிட விடாமல் தடுத்துவிட்டனர்.

    நடிகர் சூர்யா தரப்பினரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. உரிய பாதுகாப்பு அளிப்பதோடு, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு முருகராஜா புகார் தெரிவித்துள்ளார்.

    சினிமாவில் நல்லவனாகவும்,சமூக சேவகனாகவும்,சகிப்புத்தன்மையின் பிறப்பிடம் போலவும் நடிப்பவர்கள் நிஜவாழ்வில் பணத்திற்காக கொலை செய்யவும் துணியும் காட்டுமிராண்டிகள் என்பதையே இச்சம்பவம் உணர்த்துகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad