• Breaking News

    யாழ், சுன்னாகத்தில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

     யாழ்.சுன்னாகம் – குட்டிப்புலம் பகுதியில் உள்ள தோட்ட கிணற்றிலிருந்து குடும்பஸ்த்தர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது.

    சுன்னாகம் மேற்கு ஊரெழுவை சேர்ந்த இராசதுரை சுதாகரன் (வயது 36) என்ற நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  தோட்ட கிணற்றில் சடலம் காணப்படுவதாக சுன்னாகம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் அந்த பகுதிக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

    சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதனால் சில தினங்களுக்கு முன்னரே இவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.  அதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad