• Breaking News

    மன்னாரில் மர்மமான முறையில் கரையொதுங்கிய படகு!

     மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுதியில் நேற்று இந்திய நாட்டுப் படகு என சந்தேகிக்கப்படும் படகு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது.

    குறித்த படகில் பதிவு இலக்கமோ, படகின் இலக்கமோ இல்லாத நிலையில் “அர்ச்சனா” என பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சிறிய உடைவுகளுடன் குறித்த படகு கரை ஒதுங்கியுள்ளது.

    இது காற்றின் வேகம் காரணமாக கரையொதுங்கியுள்ளதா? அல்லது சட்ட விரோத கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு கைவிடப்படுள்ளதா? என்ற கோணத்தில் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.






    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad