• Breaking News

    நெடுந்தீவில் மீன்பிடிக்கச் சென்றவர் மாயம்!

    நெடுந்தீவில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றவரை காணவில்லை என உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நெடுந்தீவு 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சில்வர்ஸ்டார் மரியதாஸ் என்பவரே நேற்று காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில் இன்னும் கரை திரும்பவில்லை என உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறித்த விடயம் தொடர்பில் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் கடலுக்கு சென்றவர் தொடர்பான விவரம் சேகரிக்கப்பட்டு உரிய தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad