• Breaking News

    முகமாலையில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்

    கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட முகமாலை பகுதியில் வாள்வெட்டு கும்பல் குடும்ப தலைவர் ஒருவரை வெட்டியமையால், காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    நேற்று 11 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

    இதனால் கை கால் மற்றும் முதுகு பகுதியில் வெட்டப்பட்டுக் காயமடைந்துள்ளார்.

    பளை வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகக் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    அதே போல் வீட்டிலிருந்த வாய் பேச முடியாத நிலையிலிருந்த நபருக்கும் அடிகாயங்கள் ஏற்பட்டுள்ளது.

    அத்துடன் வீட்டிலிருந்த தொலைக்காட்சி அலுமாரி உள்ளிட்ட பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. அத்துடன் வீட்டின் பிரதான வாயிலில் காணப்பட்ட கதவும் வாலினால் வெட்டப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக விரைந்து செயற்பட்ட முகமாலை இராணுவத்தினர், மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமைகளை அவதானித்தமை குறிப்பிடத்தக்கது.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad