• Breaking News

    யாழ். கொடிகாமத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

     யாழ். கொடிகாமம் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

    கொடிகாமம் பகுதியில் வியாபாரம் செய்யும் வியாபாரி ஒருவருக்கு covid-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்த 13.08.2021 அன்று கொடிகாமம் சந்தை மற்றும் அதற்கு அண்மித்த பகுதிகளில் 84 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

    அதனடிப்படையில் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad