• Breaking News

    “உடனடியாக தகவல் தாருங்கள்” இராணுவத்தளபதி முக்கிய அறிவிப்பு

     60 வயதுக்கு மேற்பட்டோரில் இதுவரை தடுப்பூசி பெறாதவர்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

    அவ்வாறானவர்கள் தொடர்பில் உடனடியாக அறியத்தருமாறும் இராணுவத் தளபதி, பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

    இவ்வாறானவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசியை ஏற்ற தயாராக இருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

    60 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad