• Breaking News

    யாழில் பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!

     யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்து நான்கு நாட்களேயான பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    வடக்கு மாகாணத்தில் நான்கு குழந்தைகளுக்கு covid-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்து 4 நாட்களேயான பெண் குழந்தைக்கும், நான்கு வயதான ஆண் குழந்தை ஒன்றுக்கும், கிளிநொச்சி அக்கராயனில் பிறந்த 10 மாதங்களான குழந்தை ஒன்றுக்கும் மற்றும் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒரு வருடமும் 10 மாதமுமான குழந்தைக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad