• Breaking News

    3 வயதுக் குழந்தையையும் விட்டு வைக்காத கொடூர சமூகம்!


     மொனராகலை தொம்பகஹவெல பிரதேசத்தில் 3 வருடங்களும் எட்டு மாத குழந்தையொன்றை கடுமையாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


    இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 29 வயதுடைய தொம்பகஹவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் சந்தேகநபர் நேற்றுமுன்தினம் (01) பல சந்தர்ப்பங்களில் குழந்தையை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.


    குழந்தையின் தாய் குழந்தையை அருகில் உள்ள வீட்டில் விட்டு விட்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார், இதன்போதே சந்தேக நபர் இந்த குற்றச் செயலை செய்துள்ளார்.


    இதன்போது சந்தேகநபர் சியாம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad