• Breaking News

    வடக்கில் அதிரடி காட்டப்போகிறதாம் அம்மான் படையணி

     


    வட மாகாணத்தில் போதைப் பொருளுக்கு பல இளைஞர்கள் அடிமையாகிவரும் நிலையில்  சமூகத்தையும் எதிர்கால சந்ததியினையும் பாதுகாக்கும் பொருட்டு அம்மான் படையாணி தனது வேலை திட்டங்களை மேற்கொள்ளும் என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மன்) தலைமையிலான ஐக்கிய தமிழர் சுதந்திர முன்னணியின் அம்மான் படையாணி தலைமை ஒருங்கிணைப்பாள் ஜெயா சரவணா ஜெயா தெரிவித்தார்.

    யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    அவர் மேலும் தெரிவிக்கையில்,

    எமது கட்சியின் தலைவராக தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தில் 17 வருடங்கள் தன்னை அர்ப்பணித்த விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மன் செயற்பட்டு வருகிறார்.

    அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் எமது கட்சி ஆதரவா அவர்களோடு சந்திப்பு ஒன்றை மேற்கொண்டபோது நமது இளைஞர்களின் எதிர்காலத் திட்டம் பற்றி விரிவாக ஆராய்ந்தோம்.

    வட மாகாணத்தில் போதைப் பொருளுக்கு இளைஞர்களை அடிமையாகுவது தொடர்பில் ஆராய்ந்த போது அது தொடர்பில் அம்மான் படையணி ஒன்றை உருவாக்கி இளைஞர்களுக்கான வேலை திட்டத்தை செய்யுமாறு எமது கட்சியின் தலைவர் என்னைப் பணித்தார்.

    போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு நாம் செயற் படப் போகிறோம் என்றவுடன் பலர் நினைப்பார்கள் சட்டத்தை கையில் எடுத்து செயல்பட போகிறார்கள் என.

    அவ்வாறு சட்டத்தை கையில் எடுத்து செய்யும் நோக்கம் எமக்கு இல்லை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இளைஞர்களை உள்ளடக்கிய வேலை திட்டத்தினை மேற்கொள்ள உள்ளோம் என்றார்.

    மேலும் ஊடகவியலாளர் "ஒருவர் கடந்த தேர்தல்களில்  நீங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்ட நிலையில் அரசாங்கம் உங்களை கைவிட்டதாக உங்களுடைய ஆதரவாளர்கள் வெளியில் பேசிக் கொள்வது தொடர்பில் அவ்வாறு நினைக்கிறீர்கள்" என கேள்வி எழுப்பினார் .

    இதற்கு அவர் பதில் அளிக்கையில், அரசாங்கத்துடன் இணைந்து செயல்பாட்டிற்காள் என்பது உண்மைதான்.

    எமது கட்சியின் தலைவர் அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மிகவும் சொற்ப வாக்கிலே தோல்வியை சந்தித்தவை யாவரும் அறிந்த விடையம் .

    என்னிடம் அப்போதைய ஆட்சியாளர்களுக்காக நாம் வேலை செய்த நிலையில் அவர்கள் எமக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை அதை எமது தலைவர் பகிரங்கமாகக் கூட்டங்களில் சொல்லியிருக்கிறார்.

    ஆகவே நாங்கள் தற்போது சுயாதீனமாக மக்கள் முன்னால் நமது வேலை திட்டங்களை முன்னிலைப்படுத்தி மக்கள் அமைப்பைக் கட்டி எழுப்ப எதிர் பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad