• Breaking News

    கொழும்பில் ‘பொன்னியின் செல்வன்’ பார்த்தார் மஹிந்த

     


    பொன்னியின் செல்வன்'

    மணிரத்னத்தின் இயக்கத்தில் கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் தற்போது உலகளாவிய ரீதியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத்தை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச, கொழும்பில் உள்ள திரையரங்கில் இன்று  கண்டு களித்தார்.

    அவருடன் அவரது மனைவி சிரந்தி ராஜபக்ச, மற்றும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் உட்பட்டோரும் படத்தை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.


     

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad