• Breaking News

    சிறப்பாக நடைபெற்ற நவமங்கை நிவாசத்தினரின் முதியோர் தின நிகழ்வு!

     


    கோப்பாயில் இயங்கிவரும் நவமங்கை நிவாசத்தின் நிறுவுனர் ஸ்வர்ணா நவரத்தினம் அவர்களின் நெறிப்படுத்தலில் நவமங்கை நிவாசத்தில் இன்றைய தினம் முதியோர் நிகழ்வு இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தினருடன் இணைந்து சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

    பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் யாழ் மாவட்ட கிளையின் தலைவர் நவமங்கை நிவாசத்தின் நிறுவனர் ஸ்வர்ணா நவரத்தினம் மற்றும் யாழ்ப்பாண தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி சுப்ரமணியம் பரமானந்தம் மற்றும் சமூக ஆர்வலர்களின் பங்கு பற்றுதலில் இந்த இந்த நிகழ்வு இடம்பெற்றது.

    இந் நிகழ்வில் ஆசியுரையினை சண்முகராஜா குருக்கள் வழங்கியதோடு சிறப்புரைகளை உரையினை நிவாசத்தின் நிறுவனர், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட தலைவர் வழங்கினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad