• Breaking News

    யாழ். திருவடிநிலை கடலில் மர்மமான முறையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்!

     


    இன்று காலை, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை கடலில் மிதந்த நிலையில் உள்ளவாறு ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


    இனந்தெரியாத நபரின் குறித்த சடலமானது மீனவர்களின் வலையில் சிக்கியவாறு காணப்படுகிறது.


    அப்பகுதி மீனவர்கள் இன்று காலை கடற்றொழிலுக்கு சென்றவேளை சடலத்தினை அவதானித்தனர். அதன் பின்னர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.


    வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டும் அவர்கள் இன்னமும் சம்பவ இடத்திற்கு வருகைதரவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad