• Breaking News

    பல்கலைக்கழக மாணவிக்கு மடிக்கணணி வழங்கி வைப்பு!

     


    வவுனியா பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்ப பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவி, அவரது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்காக மடிக்கணிணி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

    சுவிஸ் நாட்டில் வசிக்கும் செ.விஜயரத்தினத்தின் நிதிப்பங்களிப்பில் சுமார் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான மடிக்கணணியே இன்றைய தினம் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.

    இளவாலை சேந்தாங்குளம் கிராமத்தில் வசிக்கும் மாணவியின் இல்லத்திற்கு சென்று, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் இ.தயாபரன் மற்றும் சாவகச்சேரி முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் இணைந்து மாணவியிடம் மடிக்கணணியை கையளித்தனர். 

    மாணவியின் நான்காண்டுகள் பல்கலைக்கழக கல்வி செயற்பாடுகள் முழுமைக்குமான செலவீனங்களை சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செ.விஜயரத்தினம் அவர்களே பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad