• Breaking News

    நாங்கள் விழவில்லை! இன்னமும் நாட்டை ஆள்கிறோம்:மகிந்த பெருமிதம்.

    நாட்டை இப்போதும் நாம்தான் ஆட்சி செய்கின்றோம் எனவும் எமது கட்சிதான் இப்போதும் நாட்டை ஆள்கின்றது  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் எமது பக்கமே நின்று பணியாற்றுகின்றார் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

    இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கு நாட்டை உலுக்கிய கோவிட் பெருந்தொற்றே பிரதான காரணம்.

    இதைப் புரிந்தும் புரியாதவர்கள்போல் எம் மீது சிலர் வசைபாடி புலம்பித் திரிகின்றார்கள். நாடு வங்குரோத்து அடைந்தமைக்குக் கோட்டாபய ராஜபக்சவோ அல்லது ராஜபக்சக்களோ காரணம் அல்லர்.

    ராஜபக்சக்கள் வீழ்ந்துவிடவில்லை. அவர்கள் பதவிகளிலிருந்து விலகி நின்று அரசை வழிநடத்துகின்றார்கள் என்பதே உண்மை எனவும் தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகினறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு, 


     



     

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad