• Breaking News

    பாதியிலே கைவிடப்பட்ட பாகுபலியை மிஞ்சும் பிரம்மாண்ட ரஜினியின் திரைப்படம்! தெரியாத தகவல்கள்

    தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திரைதுறையில் பல்வேறு சாதனைகளை தனது திரைப்படத்தின் மூலம் படைத்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

    மேலும் தற்போது ரஜினி இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


     
    இந்நிலையில் ரஜினி நடிப்பில் ஏகபட்ட பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகி இருப்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். அப்படி சிவாஜி, எந்திரன், 2.0, கோச்சடையான் உள்ளிட்ட முக்கிய திரைப்படங்களை குறிப்பிட்டு சொல்லாம்.

    இதற்கிடையே ரஜினி நடிப்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்க வேண்டிய திரைப்படம் ராணா. உடல்நலம் சரியான பின் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்க வேண்டியது ராணா.


     ஆனால் அப்படம் சில காரணங்களால் பூஜையுடன் போடப்பட்டு திடீரென நிறுத்தப்பட்டது. மேலும் இப்படம் பாகுபலி தொடங்கும் முன்பு அதை போல பிரம்மாண்டமாக உருவாகியிருக்க வேண்டிய திரைப்படமாம்.

    ராணா, சேனா, வீரா என மூன்று கதாபாத்திரங்கள் ரஜினி நடித்திருக்க வேண்டியதாம். அதில் ராணா கதாபாத்திரம் மிகவும் வில்லதனமான கதாபாத்திரம் என இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் நமது சினிஉலகிற்கு அளித்திருந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad