• Breaking News

    பேராதனை பல்கலைக்கழகத்தின் மேலும் ஒரு மாணவர் மாயம்!

     


    பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கற்று வந்த மற்றுமொரு மாணவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


    பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தின் மூன்றாம் ஆண்டில் பயின்று வந்த 25 வயதுடைய மாணவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.


    கடவத்தை, கணேமுல்ல பகுதியைச் சேர்ந்த மாணவரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


    குறித்த மாணவர் பேராதனை பல்கலையின் விடுதியிலிருந்து நேற்று முன்தினம் இரவு வெளியேறிய நிலையில் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, சில தினங்களுக்கு முன்னதாக கலைப் பீடத்தில் கற்று வந்த மாணவர் ஒருவர் காணாமல்போயிருந்த நிலையில் மகாவலி கங்கையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


    மாணவன் விடுதியில் இல்லை என பேராதனை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மாணவர் எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கடிதத்தில், தனக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளமையினால் தான் அனைவரையும் விட்டு விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக எழுதப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad