• Breaking News

    மேற்கு இந்தியா 197 ஓட்டங்கள் எடுத்தது

    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் மேற்கு இந்திய அணி சகல விக்கெட்களையும் இழந்து 197 ஓட்டங்கள் எடுத்தது. 

    இங்கிலாந்து - மேற்கு இந்தியா ஆகியவற்றுக்கு  இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய  இங்கிலாந்து 369 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கு இந்திய அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 137 ஓட்டங்கள் எடுத்து தடுமாறியது. 

    இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய மேற்கு இந்தியா ஒரு வழியாக பாலோ-ஆன் (170 ஓட்டங்கள்) ஆபத்தை தவிர்த்தது. கப்டன் ஜாசன் ஹோல்டர் 46 ஓட்டங்களிலும், விக்கெட் கீப்பர் ஷேன் டாவ்ரிச் 37 ஓட்டங்களிலும் ஸ்டூவர்ட் பிராட்டின் பந்து வீச்சில் வீழ்ந்தனர். முடிவில் மேற்கு இந்தியா அணி 65 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து  197 ஓட்டங்கள் எடுத்ததுஎந்த ஒரு வீரரும் அரைச் சதத்தைதாண்டவில்லை.. வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 14 ஓவர்களில் 31 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

    இன்னிங்சில் அவர் 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட் சாய்ப்பது இது 18-வது முறையாகும்.

     

    அடுத்து 172 ஓட்டகள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ரோரி பர்ன்சும், டாம் சிப்லியும் அருமையான தொடக்கம் உருவாக்கித் தந்தனர். உள்ளூரில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து தந்த முதல் இங்கிலாந்து தொடக்க ஜோடி என்ற பெருமையை பர்ன்ஸ்-சிப்லி பெற்றனர். அணியின் ஓட்ட எண்ணிக்கை 114 ஓட்டங்களை எட்டிய போது சிப்லி (56 ஓட்டங்கள்) எல்.பி.டபிள்யூ.ஆனார். 

    ரோரி பர்ன்ஸ் தனது பங்குக்கு 90 ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 58 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 226 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டத்தை நிறுத்தியது. அப்போது கப்டன் ஜோ ரூட் 68 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் மேற்கு இந்தியாவுக்கு 399 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

     

     


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad