• Breaking News

    கொரோனா வைரஸ் பரவியதைக் கண்டறிய சீனா செல்கிறது உலக சுகாதார நிறுவன குழு

     கொரோனா வைரஸின் தோற்றம் பற்றியும் மனிதர்களுக்கு அது பரவிய விதம் பற்றியும் ஆராய்வதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுனர் குழு அடுத்த வாரம் சீனா செல்கிறது.

    உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தோற்றம் பற்றி பெருத்த சர்ச்சை நிலவிவருகிறது. சீனாவின் மத்திய நகரமான வுஹானில் உள்ள இறைச்சி சந்தையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் முதன்முதலாக வெளிப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து அந்த சந்தை மூடப்பட்டு விட்டது. ஆனால் உகானில் கொரோனா வைரஸ் தோன்றியதாக சீனா ஒப்புக்கொள்ளவில்லை.

    இதற்கு இடையே, கொரோனா வைரஸ் உகானில் உள்ள வைராலஜி நிறுவனத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டு, அங்கிருந்து கசிந்து விட்டதாக அமெரிக்க டி.வி. பரபரப்பு செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் கூறி வந்தனர்.

    ஆனால் அமெரிக்க படை வீரர்கள்தான் இந்த வைரஸை சீனாவில் கொண்டு வந்து விட்டதாக சீனா குற்றம் சுமத்துகிறது. இதை அமெரிக்கா நிராகரித்தது. இப்போது இந்த வைரஸின் தோற்றம் பற்றி விசாரணை நடத்த உலக சுகாதார நிறுவனம் முன்வந்துள்ளது.

     கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய்ந்து அறிவதற்காக உலக சுகாதார நிறுவனத்தின்  வல்லுனர் குழு அடுத்த வாரம் சீனாவுக்கு செல்கிறது. இந்தக் குழு, கொரோனா வைரஸ் எவ்வாறு மனிதர்களிடம் முதன் முதலில் பரவியது, விலங்குகள் மூலமாக மனிதர்களிடம் தொற்று வந்ததா? அல்லது வெளவால்களிடம் இருந்து மனிதர்களிடம் பரவியதா? என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்த உள்ளது. 

    கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறி உள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad